

காந்தாரா சாப்டர் 1
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த 2 ஆம் தேதி திரைக்கு வந்த படம்

காந்தாரா
சாப்டர் 1. 2022ஆம் ஆண்டு வெளிவந்த காந்தாரா போலவே இப்படம் தெய்விகமாக முறையில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் பாகத்தை விட இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், சிலிர்க்க வைக்கும் காட்சிகளும் அடங்கி இருந்ததாக ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்தனர்.
4 நாட்களில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
சில எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, காந்தாரா சாப்டர் 1 படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து நடிகை ருக்மிணி வசந்த், ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல்
இந்நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் காந்தாரா சாப்டர் 1 படம், உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 225 கோடி வசூல் செய்துள்ளது.
Source: Entertainment News