அனுபமா பரமேஸ்வரன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார்.



டிரோல்களால் பயந்தேன், ஆனால்.. பைசன் பட நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்! - Related Image

அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்துள்ளார்.

உருக்கம்!

இந்நிலையில், பேட்டி ஒன்றில் அனுபமா அவர் சந்தித்த சில சவால்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், " பிரேமம் படத்திற்குப் பிறகு, டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கத் தயங்கினேன், பயந்தேன். மலையாள சினிமாவில் பலர் எனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறினர். ஆனால் எனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டேன்.

என் முழு உழைப்பை செலுத்தினேன். இன்று என்னை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது.

இப்போது, மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறேன். எனது நடிப்பு வாழ்க்கை ஒரு புதிய சாப்டருக்குள் நுழைந்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.