மாரி செல்வராஜ்

வாழை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் அடுத்ததாக பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிக்கிறார்.



விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா பா. இரஞ்சித்?.. மனம் திறந்த மாரி செல்வராஜ்! - Related Image

நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்க துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விஜய்யின் ஜனநாயகன் பட கதை இதுதானா? வெளிவந்த ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

அரசியலுக்கு வருகிறாரா?

இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், மாரி செல்வராஜ் அரசியல் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " என் வாழ்க்கையில் கலைதான் எனக்கு பெரிய போதை. பதற்றத்திலேயே இருப்பதால் மிக விரைவாக வேலை பார்க்கக்கூடிய ஆள் நான். நிறைய படங்களை எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இன்னும், 15 கதைகளையாவது திரைப்படமாக உருவாக்க விரும்புகிறேன். இயக்குநர் பா. இரஞ்சித் அரசியலுக்கு வருவார், அதற்கான முழு தகுதி உடையவர்.

அவர் எதற்கும் பயப்பட மாட்டார், களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார், கண்டிப்பாகக் களத்தில் இறங்குவார்" என்று தெரிவித்துள்ளார்.