


அரவிந்த் சாமி
சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார்

அரவிந்த்
சாமி. இதன்பின் கடல் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
ஆனால், இவருக்கு சரியான கம்பேக் படம் என்றால் அது, இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன்தான். இப்படத்தில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே சிறந்த டாப் 10 வில்லன் கதாபாத்திரத்தில் இதுவும் ஒன்றாக கண்டிப்பாக இடம்பெறும். அந்த அளவிற்கு தனது நடிப்பில் பட்டையை கிளப்பினார். கடந்த ஆண்டு பிரேம் குமார் இயக்கிய மெய்யழகன் படத்தில் அருள்மொழி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து நம்மை நெகிழ வைத்தார்.
தொடர்ந்து மூன்று ரூ. 500 கோடி வசூல் படங்கள் கொடுத்த ஒரே நடிகை.. யார் தெரியுமா
அரவிந்த் சாமியின் மகன்
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவரான அரவிந்த் சாமிக்கு ருத்ரா என்கிற மகன் உள்ளார். இந்நிலையில், அரவிந்த் சாமி தனது மகன் ருத்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை பாருங்க:
Source: Entertainment News