TVK கட்சி

நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர்.



கரூர் சம்பவத்திற்கு பின் வீட்டில் முடங்கிய விஜய் பட்ட கஷ்டம்... பிரபலம் ஓபன் டாக் - Related Image

ஒரு படத்திற்கு ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் இனி நான் நடிக்கப்போவதில்லை, மக்களுக்கு உதவ அரசியலில் களமிறங்க உள்ளேன் என தைரியமாக பெரிய களத்தில் சந்திக்க களமிறங்கியுள்ளார்.

2026 தேர்தலில் போட்டிபோடும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

அதனை தொடர்ந்து எல்லா மாநிலங்களுக்கும் Road Show செல்ல பிளான் செய்து ஒவ்வொரு மாநிலமாக வந்தவர் கரூர் வந்தபோது பெரிய பிரச்சனை ஏற்பட்டு விட்டது.

விஜய் மனநிலை

கரூரில் விஜய் ரோட் ஷோ வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அங்கு 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் சில நாட்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை, அவருக்கு அவ்வளவு மனவேதனை கொடுத்துள்ளது.

நடிகர் ஷ்யாம்

ஒரு பேட்டியில், விஜய் அவர்களுக்கு நான் பிரச்சாரம் செய்த கூட்டத்தில் இப்படி ஆனதே என மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

விஜய் அவர்களுக்கு நான் தினமும் மெசேஜ் செய்வேன், வாரத்தில் ஒருமுறை பேசுவேன். எனது மெசேஜ் பார்த்து ப்ரீயா இருந்தா பேசுவார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு நான் மெசேஜ் செய்துகொண்டே இருந்தேன், பதில் இல்லை.

5, 6 நாட்களுக்கு பிறகு தான் I Am Okay என கூறினார், அவருக்கு இந்த சம்பவம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.