லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா கொண்டாடும் இளம் இயக்குனர்களில் ஒருவர்லோகேஷ் கனகராஜ்.



மாஸ் நடிகரிடம் கதை கூறியுள்ள லோகேஷ் கனகராஜ், யாரிடம் தெரியுமா?... கூட்டணி அமைந்தால் மாஸ் தான் - Related Image

மாநகரம் என்ற படத்தை இயக்கி கவனத்தை பெற்றவர் அடுத்தே கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி ரசிகர்களின் பேவரெட் இயக்குனராக மாறினார்.

அதன்பின் மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தவர் LCU எனப்படும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸை உருவாக்கினார்.

லோகேஷ் இயக்கத்தில் அடுத்து ரசிகர்கள் கைதி 2 படத்திற்காக ஆவலாக வெயிட்டிங், அந்த படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார் என தெரிகிறது.

அடுத்த படம்

கடந்த சில நாட்களாக லோகேஷ் கனகராஜ் கைதி 2 பட வேலைகளை தொடங்கிவிட்டார் என தகவல்கள் வந்துகொண்டிருக்க இப்போது வேறொரு செய்தி வந்துள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் மாஸ் நடிகரை சந்தித்து கதை கூறியுள்ளாராம்.

அவர் வேறுயாரும் இல்லை தெலுங்கு சினிமாவின் புஷ்பா பட வெற்றி நாயகன் அல்லு அர்ஜுன் தான்.

இப்போது அவர் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகும் படத்தில் நடித்து வருகிறார், இதற்கு இடையில் லோகேஷ் கனகராஜ் கதையை தேர்வு செய்வாரா, இந்த புதிய கூட்டணி அமையுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.