இளையராஜா

இளையராஜா, 2k கிட்ஸ்களும் கொண்டாடும் இசையமைப்பாளர்களில் ஒருவர்.



இறந்த தனது மகள் பவதாரிணிக்காக இளையராஜா செய்துள்ள விஷயம்... கொண்டாடும் மக்கள் - Related Image

இவரது மகள் பவதாரிணியும் ஒரு பாடகி, இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் இலங்கையில் காலமானார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது இறப்பிற்கு பிறகு AI மூலம் கோட் திரைப்படத்தில் பவதாரிணியின் குரல் பயன்படுத்தப்பட்டது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மகள் நினைவு

தற்போது பவதாரிணி நினைவாக இளையராஜா ஒரு ஸ்பெஷல் விஷயம் செய்துள்ளார்.

அதாவது பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா (Bavatha Girls Orchestra) என்ற 15 வயதுக்குட்பட்டவர்களக்கான ஆர்கெஸ்ட்ரா ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக திறமையுள்ள பெண் பாடகர்கள் இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

விருப்பமுள்ளவர்கள் allgirlsorchestra@gmail.com என்கிற மெயிலுக்கு தங்களின் விபரங்களை அனுப்பலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இளையராஜாவிடம் இருந்து இப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளதால் கலைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள்.