இந்திய நடிகை ஒருவர் விவாகரத்து வழக்கில் தனது கணவரிடம் இருந்து 100 கோடி நஷ்டஈடு மற்றும் மாதம் 10 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டிருக்கிறார்.

நடிகை செலீனா ஜெட்லீ தான் இப்படி கேட்டிருக்கிறார். அவர் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஹோட்டல் தொழிலதிபர் பீட்டர் ஹேக் என்பவரை கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார்.



மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம், 100 கோடி நஷ்டஈடு கேட்கும் நடிகை: நீதிமன்றம் போட்ட உத்தரவு - Related Image

100 கோடி வேண்டும்

15 வருட திருமண வாழ்க்கையில் தன்னை அவர் கொடுமைப்படுத்தியதாக செலீனா ஜெட்லீ domestic violence வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

அதில் தனக்கு 100 கோடி ரூபாய் நஷ்டஈடு மற்றும் மாதம் 10 லட்சம் ரூபாய் maintenance ஆக தரவேண்டும் என நடிகை கேட்டிருக்கிறார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு தரப்பின் வருமான விவரங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, ஜனவரி 27ம் தேதிக்கு அடுத்த விசாரணை தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.