எதிர்நீச்சல் தொடர்கிறது

குணசேகரன், என்ன தான் தவறு செய்தாலும் தப்பித்துக்கொண்டே இருக்கும் ஒரு நபர். இவர் செய்த தவறுகளுக்கு எப்படி தண்டனை கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்பதை காண தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.



தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ - Related Image

ஆனால் அவருக்கு பிரச்சனை வந்தாலும் பெண்கள் சாதிக்க கூடாது என்பதில் மட்டும் மிகவும் தெளிவாக இருக்கிறார், அவர்களுக்கு எப்படியெல்லாம் பிரச்சனை கொடுக்கலாம் என பிளான் போடுகிறார்.

புரொமோ

இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி கடை திறப்பதற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். இந்த அன்புக்கரசி வீட்டில் இருந்துகொண்டு எல்லா விஷயத்தையும் குணசேகரனுக்கு அப்டேட் கொடுத்து வருகிறார்.

குணசேகரன் இந்த வண்டியை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என கேட்க அன்புக்கரசி மொத்த விவரத்தை கூறுகிறார். உடனே குணசேகரன் தனது வேலையை காட்ட ஜனனிக்கு வண்டி கொடுத்தவர் வீடு தேடிவந்து தனது வண்டியை கேட்கிறார்.

இதனால் ஜனனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.