ஆடுகளம் படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனவர் டாப்ஸி பண்ணு. அவர் அதற்கு பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற பல படங்களில் நடித்தார்.

தற்போது தமிழில் நடிப்பதை குறைத்துவிட்டு ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு கடந்த வருடம் மதியாஸ் போ என்ற பாட்மிண்டன் வீரர் உடன் திருமணம் நடந்து முடிந்தது.



எல்லா இயக்குனரும் அதை தான் கேட்கிறார்கள்.. நடிகை டாப்ஸி சொன்ன ஷாக்கிங் விஷயம் - Related Image

கர்லி ஹேர்

சமீபத்தில் டாப்ஸி அளித்த பேட்டியில் தான் நடிக்க வந்த புதிதில் சுருள் முடி காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்ததாக கூறி இருக்கிறார்.

முடி நேராக இருந்தால் தான் கிளாமராக இருக்கும் என எல்லா இயக்குனர்களும் நம்புகிறார்கள். அதனால் என்னுடைய முடியை straight ஆக்க வேண்டும் என அடிக்கடி கேட்பார்கள்.

சுருள் முடி எப்போதும் கலகம் ஏற்படுத்தும் ஒரு ரோலுக்கு தான் செட் ஆகும், நல்ல பெண் ரோலுக்கு அது செட் ஆகாது என சொல்வார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்பதால் இயக்குனர் சொல்வதை ஏற்று முடியை straighten ஆக்கிவிடுவேன்.

படங்கள் மட்டுமின்றி விளம்பரத்தில் நடிக்கும் போது கூட அதை தான் சொல்வார்கள்.