
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் மகேஷ், அன்பு, ஆனந்தி என மொத்த பேரும் ஏற்காட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கின்றனர்.
அங்கு வந்து ஆனந்தியை கொலை செய்ய துளசி பல முயற்சிகளை செய்த நிலையில் அதில் இருந்து எப்படியோ ஆனந்தி தப்பிவிட்டார்.
அதன் பிறகு எல்லோரும் சேர்ந்து ஒரு அருவியில் சென்று குளித்துக்கொண்டிருக்கின்றனர்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அவர்கள் குளித்துக்கொண்டு இருக்கும் அருவி அருகில் யானை வருவது போல சத்தம் கேட்டதால் எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு திசையில் ஓடுகின்றனர்.
அந்த நேரத்தில் அன்பு - ஆனந்தி தனியாக செல்ல, அவர்கள் யானைக்கு யாரோ வெட்டிவைத்த குழியில் விழுந்துவிடுகின்றனர்.
அதன்பின் அவர்கள் இருவரையும் மற்றவர்கள் தேடி அலைகின்றனர். ப்ரோமோவை நீங்களே பாருங்க.
Source: Entertainment News