

எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, ஈஸ்வரி, ஜனனி, ரேணுகா, நந்தினி வரும் பிரச்சனைகளை எதிர்க்கொண்டு சாதிக்க வேண்டும் என எதிர்நீச்சல் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் பணம், ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரன் பெண்கள் சாதிக்கவே கூடாது என் காலடியில் தான் அவர்கள் என மன்னிக்கவே முடியாத தவறுகளை செய்து தனது வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி வருகிறார்.
புரொமோ
குணசேகரன் ஜனனி கடை திறப்பு விழாவை இறப்பு விழாவாக மாற்ற பிளான் போட்டுள்ளார்.
கொற்றவை குணசேகரன் சும்மா இருக்க மாட்டார், பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என கூற ஜனனி வேண்டாம் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். இதற்கு இடையில் அறிவுக்கரசி, கொற்றவை வீட்டிற்கு வந்ததை அப்டேட் செய்கிறார்.
திடீரென தாரா பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து நந்தினியிடம், அப்பா போன் செய்தார் என ஏதோ கூறுகிறார், இதனால் அவர் ஷாக் ஆகிறார். இதோ இன்றைய எபிசோடின் புரொமோ,
Source: Entertainment News