பிக் பாஸ் 9ம் சீசனில் கம்ருதின் மற்றும் பார்வதி இருவரும் காதல் ஜோடியாக வலம் வருகின்றனர். அவர்கள் எல்லைமீறி நெருக்கம் காட்டி வருவதாகவும், சில நேரங்களில் கேமரா இல்லாத இடங்களில் மோசமாக நடந்துகொள்வதாகவும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த விஷயம் பற்றி விஜய் சேதுபதி நேற்றைய எபிசோடில் பேசி இருக்கிறார்.

எல்லாத்தையும் காட்ட முடியுமா..

'ட்ரிம் செய்த முடி கீழே சிதறி கிடப்பது பற்றிய சண்டையை விஜய் சேதுபதி விசாரித்து கொண்டிருந்தார். அப்போது பாரு - கம்ருதினை மறைமுகமாக அவர் தாக்கி பேசினார்.

'வீட்டின் அத்தனை திசைகளிலும் ஆளாளுக்கு என்னென்னவோ பண்றீங்க. எல்லாத்தையும் (டிவில) காட்ட முடியுமா' என விஜய் சேதுபதி கேட்க, திரையில் பாரு மற்றும் கம்ருதீன் ஆகியோர் ரியாக்ஷன் தான் காட்டப்பட்டது. அதற்கு பிக் பாஸ் அரங்கத்தில் பார்வையாளராக வந்திருந்தவர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.

Nanbargale ippa enna achu na 😂😂.#VJPaaru🤭🤭#Kamrudin#BiggBossTamil9#BiggBossTamil#BiggBossTamilSeason9pic.twitter.com/5P9Mjw6oly— Dr. Jemy Jose (@jemy_josee)December 20, 2025

Nanbargale ippa enna achu na 😂😂.#VJPaaru🤭🤭#Kamrudin#BiggBossTamil9#BiggBossTamil#BiggBossTamilSeason9pic.twitter.com/5P9Mjw6oly