சரண்யா

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் நாயகன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.



பொன்வண்ணன்-சர்ண்யா மகளுக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்... போட்டோ இதோ - Related Image

அப்படத்தை தொடர்ந்து மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, கருத்தம்மா, மீண்டும் சாவித்திரி என அடுத்தடுத்த படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே 1995ம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

நிச்சயதார்த்தம்

மூத்த மகள் பிரியதர்ஷினி குழந்தைகள் நல மருத்துவராகவும், இளைய மகள் சாந்தினி மகப்பேறு மருத்துவராகவும் உள்ளனர்.

சமீபத்தில் சரண்யா பொன்வண்ணன் இளைய மகள் சாந்தினிக்கும் டானினுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.