

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் படம் பராசக்தி.
இந்த கதையில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தார், ஆனால் அவர் சில காரணங்களால் விலகிவிட்ட நிலையில் அதற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படமாக்கி இருக்கிறார் சுதா கொங்கரா.

கதை திருட்டு வழக்கு
இந்நிலையில் பராசக்தி தன்னுடைய செம்மொழி என்ற கதையை திருடி எடுக்கப்பட்டு இருக்கிறது என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
வழக்கை விசாரித்த நீதிபதி படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். கதை திருட்டு புகார் பற்றி விசாரித்து ஜனவரி 2ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
Source: Entertainment News