


சூப்பர் சிங்கர்
பாடல் திறமை கொண்ட கலைஞர்கள் பாடல் பாட ஆசைப்படும் ஒரு பிரம்மாண்ட மேடை தான் சூப்பர் சிங்கர் 11.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த ஷோ சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. 7 பேர் பைனலிஸ்ட்டாக வர நிகில் என்பவர் டைட்டிலை ஜெயித்தார்.
இந்த 7 போட்டியாளர்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பாடகர் தான் சரண் ராஜா. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் இளையராஜா போலவே பாடல்கள் பாடி அனைவரையும் அசத்தியிருக்கிறார்.
சூப்பர் சிங்கர் 11 போட்டியாளர்களில் யாருக்கும் கிடைக்காத ஒரு விஷயம் இவருக்கு நடந்தது, அதாவது சரண் ராஜா, இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
நியூ லுக்
சூப்பர் சிங்கர் 11 நிகழ்ச்சி முடித்து அவரவர் பணிகளை கவனிக்க தொடங்கிவிட்டனர். சிலருக்கு பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைப்பில் பாடல் பாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த நிலையில் இளையராஜா குரலில் பாடல்கள் பாடி அசத்திய சரண் ராஜா நிகழ்ச்சி முடிந்த கையோடு புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். அவரது நியூ லுக் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அட சரண் ராஜாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
Source: Entertainment News