பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இந்த கதையில் இப்போது எந்த ஒரு பரபரப்பான கதைக்களம் இல்லை. இந்த வார புரொமோவில் பாண்டியனை கோமதி வெறுப்பேற்றும் காட்சிகள் தான் இடம்பெற்றன, கதையிலும் எந்த ஒரு திருப்புமுனை கதைக்களமும் இப்போது வரை இல்லை.



சந்தோஷப்படும்படி மயில் வாழ்க்கையில் நடந்த விஷயம், என்ன தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - Related Image

எபிசோட்

இன்றைய எபிசோடில், மீனா-கோமதியின் பாண்டியன் பற்றிய பேச்சுகள் இடம்பெறுகிறது. அந்த சமயம் ராஜி-கதிர் வெளியே கிளம்ப வர அவர்களுடன் ஒரு சில காட்சிகள்.



சந்தோஷப்படும்படி மயில் வாழ்க்கையில் நடந்த விஷயம், என்ன தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - Related Image

வீட்டைவிட்டு வெளியே வந்த கதிர்-ராஜியை கண்டு குமார் அப்படியே பார்த்துக்கொண்டு நிற்க வெளியிலேயே அவர்களின் ரொமான்ஸ் நடக்கிறது. பின் அப்பத்தாவிற்கு டாடா காட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

அடுத்து அப்பத்தா கோவிலுக்கு சென்று தனது மகன்கள் ஏற்பாடு செய்த பெண் வீட்டாரிடம் தனது பேரனுக்கு இந்த கல்யாணத்திற்கு விருப்பம் இல்லை என்று கூறி நிச்சயதார்த்தத்தை நிறுத்த கூறுகிறார்.

வீட்டில் பாக்கியம் எங்களுக்கு தோசை மாவு வேண்டும் என கூற மயில் கையில் இருந்த தோசையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு பசியோடு சென்றுவிடுகிறார். பின் வேலை செய்யும் இடத்திற்கு வந்தவருக்கு ஒரு சந்தோஷமான விஷயம் நடக்கிறது.

அதாவது வெறும் வீட்டில் இருக்கும் பாட்டியை பார்த்துக்கொண்டவர் சமையல் வேலையையும் செய்கிறேன் என கூற அவருக்கு சம்பளமும் உயருகிறது. மாதம் ரூ.17 ஆயிரம் சம்பளம் தருவதாக கூற மயில் சந்தோஷப்பட அதனை மீனாவிடம் கூறி சந்தோஷப்படுகிறார்.