பாண்டியன் ஸ்டோர்ஸ்

இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ்சீரியலில், தங்கமயில் - சரவணனின் விவாகரத்து வழக்கு பரபரப்பாக நடைபெற்றது.



தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ - Related Image

இதில் தனக்கு விவாகரத்து வேண்டாம் என மயில் கூறினார்.

இதன்பின் தற்போது அவருடைய வீட்டில் அவரது அம்மா தங்கமயில் திட்டி தீர்க்கிறார். இனி நீ செத்துப்போனால் கூட கவலை இல்லை என அவர் கூறவும் மனமுடைந்து போகும் மயில், அங்கிருந்து தனது கணவர் சரவணனை சந்திக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருகிறார்.

தங்கமயில் தற்கொலை முயற்சி

அங்கு, சரவணனும் தங்கமயிலை கடுமையாக திட்டி அனுப்பிவிடுகிறார். இதனால் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு எடுக்கிறார் மயில். சாலையில் தனியாக மயில் நடந்து செல்வதை மீனா, பார்த்தவுடன் சந்தேகத்துடன் அவரை பின் தொடர்கிறார்.

இந்த நிலையில், யாருமே இல்லாத காட்டுக்குள் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயிலை மீனா காப்பாற்றுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.