சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை சீரியல்களின் கதைக்களம் எல்லாம் சூடு பிடிக்க ஒளிபரப்பாகி வருகிறது.



சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து - Related Image

கடைசி எபிசோடில், ஸ்ருதி-ரவி-நீது பிரச்சனை தான் பரபரப்பாக காட்டப்பட்டது. நீது கடைக்குள் ரவுடிகள் சென்று அவரை கடைக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இன்னொரு பக்கம் நீது வீட்டிற்கு சென்று அவரை மோசமாக அடிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரவி அவரின் நிலை பார்த்து பதற முத்து தான் இதற்கு காரணம் என நீது கூறிய வேகத்துடன் வீட்டிற்கு வந்த ரவி முத்துவை சரமாரியாக திட்டியுள்ளார்.



சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து - Related Image

இன்றைய எபிசோட்

இன்றைய எபிசோடில் சிறகடிக்க ஆசை சீரியலில் சோகத்தின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது முதலில் ரோஹினி இவர் பெரிய டீலர் என ஷோரூம் அழைத்துவந்து மனோஜிடம் பேச வைக்கிறார்.

மனோஜை தனது வழிக்கு கொண்டுவர ரோஹினியும் என்னென்னவோ செய்கிறார். அடுத்து மீனா ஸ்ருதி வீட்டிற்கு சென்று நீதுவிற்கு நடந்த விஷயத்தை கூற அவரது அம்மா-அப்பா வாய்க்கு வந்தது பேசுகிறார். அடுத்து தொடரில் நடந்தது தான் சோகத்தின் உச்சமாக உள்ளது.

கார் ஷெட் வந்த செல்வத்தை நீ கடையை அடித்து உடைத்தாயா என முத்து கேட்க அவர் செம கோபப்படுகிறார். இருவருக்கும் இதை வைத்து பெரிய சண்டையே நடக்கிறது, செல்வம் கோபப்பட்டு காரை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறார்.

கார் ஓட்டிச் சென்ற வேகத்தில் அவர் ஒரு பெண் மீது காரை ஏற்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறார். அவர் யார் என்று பார்த்தால் அருணின் அம்மா, இதைப்பார்த்ததும் கதறி கதறி அழும் மீனா முத்துவிற்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறுகிறார்.

பின் அவரின் இறப்பிற்கான சடங்குகள் நடக்க முத்துவும் அருண் வீட்டிற்கு வருகிறார். ஆனால் அருண், முத்து தான் எனது அம்மாவை கார் ஏற்றி கொன்றுவிட்டான் என கூறுகிறார்.