





நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடம் காதலித்து அதன் பிறகு ஜூன் 9, 2022ல் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு ஐந்து வருடங்கள் முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் வாடகைத்தாய் சர்ச்சை வெடித்தபோது தெரிவித்து இருந்தனர்.
தற்போது நயன்தாரா தனது குழந்தைகள் உடன் அதிகம் நேரம் செலவிட்டு வருகிறார். சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் ஷூட்டிங் இருந்தால் கூட குழந்தைகளையும் அவர் அழைத்து செல்கிறார்.

மேலும் விக்கி - நயன் மற்றும் குழந்தைகள் அதிகம் துபாயில் தான் இருக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் வெளியிடும் போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.
காதலர் தின புகைப்படங்கள்

இந்நிலையில் இன்று காதலர் தினம் என்பதால் நயன்தாரா அவரது கணவர் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். 10 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக இருப்பது பற்றி நெகிழ்ச்சியா பேசியுள்ளார்.
நெருக்கமான அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.

View this post on InstagramA post shared by N A Y A N T H A R A (@nayanthara)
View this post on InstagramA post shared by N A Y A N T H A R A (@nayanthara)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by N A Y A N T H A R A (@nayanthara)
Source: Entertainment News