அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் கொண்டாடும் தொடராக உள்ள அய்யனார் துணை சீரியலில் அதிரடி கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதாவது நிலா- சோழன் திருமண கதையை ராகவிடம் சொன்னதால் வீட்டிற்கு வந்து நிலா செம கோபப்பட்டார். இதனால் சேரன் மிகவும் கஷ்டப்பட பின் தனது தம்பி மற்றும் நிலாவிடம் மன்னிப்பு கேட்டார்.

அந்த பிரச்சனை முடிய உடனே வீட்டிற்குள் பாம்பு வருகிறது, இதனால் நிலா பயப்பட வீட்டை கொஞ்சம் மாற்ற அண்ணன்-தம்பிகள் ஏற்பாடு செய்தார்கள்.

இன்றைய எபிசோட்

வீட்டில் எங்களுக்கும் பங்கு உள்ளது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது வீட்டில் எதுவும் செய்யக்கூடாது என ஆர்டர் உள்ளது, அப்படி செய்தால் வீட்டிற்கு சீல் வைக்க வேண்டும் என நடேசன் சகோதரர் கூற ஆர்டரை படித்து போலீஸ் வீட்டிற்கு சீல் வைக்கிறார்கள்.

வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள் நிலாவை கூட்டிக்கொண்டு ஒரு ஹோட்டல் செல்கிறார்கள்.

இப்போதைக்கு இங்கு தங்குவோம், அடுத்து என்ன செய்வது என முடிவு செய்வோம் என பேசிக்கொள்கிறார்கள்.