சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு பராசக்தி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. படத்தின் கதை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டு இருந்தது.

தான் எழுதிய செம்மொழி என்ற கதையை திருடி தான் பராசக்தி எடுக்கப்பட்டு இருக்கிறது என் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



பராசக்தி வழக்கு.. ஓடிடி ரிலீசுக்கு நீதிமன்றம் அதிரடியாக போட்ட உத்தரவு - Related Image

தடை இல்லை

1965ல் நடந்த ஒரு வரலாற்று சம்பவத்திற்கு யாரும் காப்புரிமை அல்லது தனியுரிமை கோர முடியாது என பராசக்தி பட தயாரிப்பாளர் பதில் மனு அளித்திருக்கிறார்.

அதை ஏற்று நீதிமன்றம் பராசக்தி பட ஓடிடி ரிலீசுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து இருக்கிறது. அதனால் திட்டமிட்டபடி பராசக்தி பிப்ரவரி 7ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.