நடிகை ருக்மிணி வசந்த் தற்போது சென்சேஷன் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் இருந்து வருகிறார். அவர் விஜய் சேதுபதி ஜோடியாக ஏஸ், சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை.

அதன்பின் அவர் நடித்த காந்தாரா படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதில் அவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தது.



சம்பளத்தை உயர்த்திய ருக்மிணி வசந்த்! அதனால் வந்த சிக்கல் - Related Image

அடுத்து ருக்மிணி வசந்த் தற்போது யாஷ் உடன் டாக்சிக் படம் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

சம்பளம்

காந்தாரா ஹிட் ஆன பிறகு ருக்மிணி வசந்த் தனது சம்பளத்தை பல கோடி உயர்த்திவிட்டார்.

அதன் காரணமாகவே தற்போது பல தயாரிப்பாளர்கள் அவரை படங்களில் கமிட் செய்ய தயங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.  அதனால் பட வாய்ப்புகள் அவருக்கு தேடி வருவது குறைந்திருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.