

விஜய் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்து இருக்கும் விவாகரத்து வழக்கு தற்போது தமிழ் சினிமா ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
விஜய் ஒரு நடிகை உடன் தொடர்பில் இருந்தார் என குற்றம்சாட்டி இருக்கும் சங்கீதா, அதை பற்றி கேட்டபிறகும் குற்றஉணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் உறவை தொடர்ந்தார் என கூறியுள்ளார்.

போட்டோவால் அவமானம்
அந்த நடிகை உடன் வெளிநாடுகளுக்கு சென்றது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்துகொண்டார்.
விஜய் உடன் அந்த நடிகை இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டதால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம் ஆக இருந்தது என சங்கீதா கூறி இருக்கிறார்.
அந்த நடிகையின் பதிவுகளுக்கு விஜய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, அதனால் மறைமுகமாக அதை ஆதரித்தார்.
இந்த செயல்களால் தனக்கும் குழந்தைகளுக்கும் நண்பர்கள் மற்றும் சமூகத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டது என சங்கீதா குறிப்பிட்டு இருக்கிறார்.
Source: Entertainment News