புதிய திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை எந்த தொலைக்காட்சி கைப்பற்ற போகிறது என்கிற போட்டி எப்போதும் நிலவும். அதுவும் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.

அப்படி ஒரு முன்னணி நட்சத்திரம் என்கிற அந்தஸ்தில் இந்திய அளவில் தற்போது இருப்பவர்தான் நடிகர் யாஷ்.



600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படத்தை வாங்கிய ஜீ தமிழ்.. TRP எகிறப்போகுது.. - Related Image

டாக்சிக்

யாஷ் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க கே.வி.என் நிறுவனம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

ஜீ தமிழ்

இந்நிலையில், டாக்சிக் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சிக் படம் மட்டும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தால், கண்டிப்பாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமயத்தில் ஜீ தமிழின் TRP எங்கேயோ சென்றுவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.