சாரா அர்ஜுன்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தெய்வத்திருமகள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். இதை தொடர்ந்து சைவம் படத்தில் நடித்ததற்காகவும் நல்ல வரவேற்பை பெற்றார்.



அந்த விஷயத்தை நான் விரும்புவது கிடையாது.. நடிகை சாரா அர்ஜுன் ஓபன் டாக் - Related Image

இதன்பின் பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்திருந்தார். அப்போதே, தெய்வத்திருமகள் படத்தில் பார்த்த சிறுமியா இது என பலரும் ஆச்சரியப்பட்டனர். கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர்கள் இருவருடைய வயது வித்தியாசம் ஒரு பேசுபொருளானாலும், படம் மிகப்பெரிய வெற்றியை சாராவிற்கு பெற்று தந்தது. வருகிற மார்ச் 19ஆம் தேதி துரந்தர் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், நடிகை சாராஅர்ஜுன்சமீபத்திய பேட்டி ஒன்றில் மேக்கப் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.



அந்த விஷயத்தை நான் விரும்புவது கிடையாது.. நடிகை சாரா அர்ஜுன் ஓபன் டாக் - Related Image

மேக்கப்

இதில், "நான் பெரிய அளவில் மேக்கப் விரும்புவது கிடையாது. இயற்கையான அழகைத்தான் விரும்புகிறேன். பட விழாக்களுக்கு சென்றாலும் லேசான டச்சப் மட்டும் செய்து கொண்டு கிளம்பி விடுவேன். படப்பிடிப்பின் போதும் தேவைப்படும் பட்சத்தில்தான் உரிய மேக்கப் போடுவேன், அதுவும் அளவாகத்தான் பயன்படுத்துவேன். மற்றபடி மேக்கப் விரும்பாத ஆள் நான்" என கூறியுள்ளார்.