


எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் கோலங்கள் சீரியலை தொடர்ந்து திருச்செல்வம் அவர்கள் இயக்கிவரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

கதையில் இப்போது குணசேகரன் ஜாமின் கேன்சல் ஆகி அவர் மீண்டும் ஜெயிலுக்கு செல்லப்போவதாக ஆடிட்டர் கூறுகிறார். இதனால் கதிர் மற்றும் ஞானம் பதறுகிறார்கள், ஆனால் இந்த பிளானிற்கு பின்னால் ஏதோ குணசேகரன் யோசிக்கிறார் என்பதை மட்டும் ஜனனி நினைக்கிறார்.
அதோடு மருத்துவமனையில் இருந்து குணமாகியுள்ள ஈஸ்வரி மருத்துவ செலவு மட்டும் ரூ. 50 லட்சம் என தகவல் வர அந்த பணத்தை குணசேகரனிடம் வாங்காமல் எப்படி கொடுப்பது என குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.
கனிகா
இந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் கனிகா.
முதல் பாகத்தை தொடர்ந்து 2ம் பாகத்திலும் தொடர்ந்து நடித்து வந்தவர் பாதியில் வெளியேறிவிட்டார், அதற்கு காரணம் அவரது மகன் 10வது படிக்கிறாராம், கூடவே இருந்து பார்க்கவே சீரியலில் இருந்து வெளியேறியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சீரியலில் ஈஸ்வரியாக நடிக்க ஒரு நாளைக்கு கனிகா ரூ. 15 முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
Source: Entertainment News