எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.



ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது - Related Image

எல்லா தவறையும் செய்துவிட்டு பணத்தை வைத்து குற்றங்களில் இருந்து தப்பித்து தைரியமாக வலம் வருகிறார் குணசேகரன். ஆனால் அநியாயத்தை தட்டிக்கேட்க வேண்டும் என போராடும் ஜனனிக்கு எப்போதும் ஆபத்துகளாகவே வந்துகொண்டிருக்கிறது.

இப்போது கதையில் நல்லவராக உறவாடி உங்கள் மனைவியை கைக்குள் போடுங்கள் என தம்பிகளிடம் குணசேகரன் கூற அப்படியே அவர்களும் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜனனி கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு எந்த டென்ஷனும் தரக் கூடாது என சக்தி பதற்றமாகவே உள்ளார்.



ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது - Related Image

புரொமோ

கடந்த சில தினங்களாக ஈஸ்வரி குணமாகிவிட்டார் சில தினங்களிலும் வீட்டுக்கு வந்துவிடுவார் என பெண்கள் பேசுகிறார்கள். ஈஸ்வரியின் மருத்துவ செலவிற்கு தானே பணம் கட்டுகிறேன் என முன்வருகிறார் குணசேகரன்.

சக்தி மருத்துவரிடம் போன் செய்து பில் எவ்வளவு என கேட்க ரூ. 50 லட்சத்திற்கு இருக்கும் என்கிறார்.

ஆனால் தர்ஷினி அவரால் தான் என் அம்மா மருத்துவமனையில் உள்ளார், அவருடைய பணத்தில் அம்மாவிற்கு கட்ட வேண்டுமா தேவையில்லை என ஒரு முடிவோடு இருக்கிறார். குணசேகரனோ ஒரு பையை கொண்டு வந்து நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன் என்கிறார்.

அப்படி என்ன முடிவு, அந்த பேப்பரில் என்ன உள்ளது என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்.