மகாநதி

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று மகாநதி. கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.



காவேரியை கடத்திய ராகவ்... மகளை காப்பாற்ற போராடும் விஜய்... மகாநதி சீரியல் புரோமோ - Related Image

மகாநதி சீரியலில் தற்போதைய கதைப்படி, இறந்துவிட்டதாக விஜய் நினைத்துக்கொண்டிருந்த தனது மனைவி காவேரி தற்போது உயிரோடு இருப்பதை அறிந்து, அவருடன் மீண்டும் சேர முயற்சி செய்து வருகிறார்.

காவேரியை கடத்திய ராகவ்

விஜய்யின் மனைவி காவேரி வேலை செய்யும் அதே பள்ளியில்,விஜய்யின் மகள் படித்து வருவதால், இருவருக்கும் இடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் காவேரியின் குடும்பத்தை பழிவாங்க பல விதமான முயற்சிகளை ராகவ் செய்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது விஜய்யின் மகளை ராகவ் கடத்திவிட்டார். இதனை அறிந்து விஜய் - காவேரி இருவரும் தங்கள் மகளை தேடி அலையகின்றனர். விஜய்யிடம் ராகவ் சிக்குவானா, தனது மகளை காப்பாற்றுவாரா விஜய்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.