எதிர்நீச்சல் தொடர்கிறது

தமிழ் சின்னத்திரையில் 2 சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்கள் சில உள்ளது, அதில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.



எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ரேணுகாவாக கலக்கும் நடிகை பிரியதர்ஷினி சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Related Image

கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் பரபரப்பின் உச்சமான கதைக்கனத்துடன் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து வீட்டுப் பெண்களை பாடாய் படுத்திய குணசேகரன் இப்போது எதுவும் செய்யாதவர் போல அப்படியே நல்லவராக நடித்து வருகிறார்.

அவரது நடிப்பை கதிர்-ஞானத்தை தாண்டி யாரும் நம்பவே இல்லை. தனது சொத்தை எல்லாம் தம்பிகளின் பெயரில் அவர் மாற்றி எழுதிய விஷயங்கள் ஜனனி நிறைய சந்தேகம் இருக்கிறது.

சம்பளம்

இப்படி கதைக்களம் பரபரப்பாக என்ன ஆனது, என்ன நடந்தது, என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் அதிகம் கேள்வி கேட்கும் அளவிற்கு கதையில் சுவாரஸ்யம் இருந்து வருகிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ரேணுகாவாக நடித்து அசத்தி வருபவர் தான் பிரியதர்ஷினி. தொகுப்பாளினி டிடியின் அக்காவான அவரை பலரும் ரேணுகாவாக கொண்டாட தான் அதிகம் ஆசைப்படுகிறார்கள்.

ரேணுகாவாக இந்த சீரியலில் நடிக்க பிரியதர்ஷினி ஒரு நாளைக்கு ரூ. 13 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.