


அய்யனார் துணை
பாண்டியன் - வானதி மற்றும் சேரன் - சந்தா இரு ஜோடிகளின் திருமணம் குறித்து பரபரப்பு ஒரு பக்கம் இருக்க, தற்போது பல்லவன் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

தனது காதலியுடன் நண்பரின் லாட்ஜுக்குச் செல்கிறார் பல்லவன். அங்கு இருவரும் பேசிக்கொண்டுதான் இருக்கப்போகிறோம் என பல்லவன் கூறுகிறார். லாட்ஜுக்குள் பல்லவன் தனது காதலியுடன் செல்வதை பார்த்து சோழன் கடும் அதிர்ச்சியடைகிறார்.
பல்லவன் கைது
இதன்பின், அந்த லாட்ஜில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல் அறிந்து, போலீஸ் அங்கு வருகிறார்கள். இந்த சமயத்தில் பல்லவன் தனது காதலியுடன் ரூமில் இருப்பதை பார்த்து, இருவரையும் போலீஸ் கைது செய்கிறது.
பல்லவன் கைது ஆவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார் சோழன்.
லாட்ஜிலிருந்து கைது செய்யப்பட்டு வெளியே வரும் பல்லவன், "நான் எந்த தப்பும் பண்ணவில்லை" என சோழனிடம் கூற, அவரை போலீஸ் தரதரவென இழுத்து ஜீப்பில் ஏற்றுகிறது. இதன்பின் அய்யனார் துணைசீரியலில்என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Entertainment News