


எதிர்நீச்சல் தொடர்கிறது
கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் இப்போது சன் டிவியில் இயக்கிவரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

இப்போது கதையில் குணசேகரன் தனது தம்பிகளுக்கு சொத்தை எழுதிக்கொடுத்து அவர்களுக்கு சாவி கொடுத்து நன்றாக ஆட வைத்து வருகிறார். ஜனனி-சக்தி வீட்டில் இல்லாத இந்த நேரத்தில் ஏதோ பூஜை நடத்தியே ஆக வேண்டும் என குணசேகரன் இருக்கிறார்.
அப்படி என்ன பூஜை, யார் வரப்போகிறார் என்பது எல்லாம் தெரியவில்லை.
இன்னொரு பக்கம் ஜனனியை அழித்தே ஆக வேண்டும் என தேவசகாயம் அவர்களை மறைந்து இருந்து என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறார்.
குட் நியூஸ்
இந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் மூலம் இதில் நடிக்கும் அனைவருமே மக்களிடம் நன்கு அங்கீகாரம் பெற்றுவிட்டனர்.
அவர்களின் நிஜ பெயரை தாண்டி சீரியல் கதாபாத்திர பெயர் வைத்து தான் அதிகம் இதில் நடிப்பவர்களை மக்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அப்படி சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் மனதை வென்றவர் தான் கனிகா.
இவர் தனது மகனின் படிப்பை கவனிப்பதற்காக சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.
இப்போது ஈஸ்வரி கதாபாத்திரம் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ள நிலையில் புதிய ஈஸ்வரியாக யார் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வந்துள்ளது. இனி ஈஸ்வரியாக பொம்மலாட்டம் சீரியல் புகழ் ஸ்ரீஜா இனி ஈஸ்வரியாக நடிக்க உள்ளாராம்.
View this post on InstagramA post shared by Tamil Tellywood (@tamiltellywood)
View this post on InstagramA post shared by Tamil Tellywood (@tamiltellywood)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Tamil Tellywood (@tamiltellywood)
Source: Entertainment News