


சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் ஒரு பெண்ணின் வாழ்க்கை கதையாக தொடங்கப்பட்ட சீரியல் தான் சிங்கப்பெண்ணே.

ஆனந்தி கர்ப்பமாகிவிட்டார், ஆனால் அவரது கர்ப்பத்திற்கு யார் காரணம் என இதுவரை தெரியவில்லை, கடந்த சில எபிசோடுகளுக்கு முன் அவரை கர்ப்பமாக்கியது யார் என்று தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.
ஆனால் இப்போது ஆனந்தி அன்பு வீட்டிற்கு வந்துவிட்டார், அவரை துளவி பழிவாங்கும் காட்சிகள் தான் அதிகம் இடம்பெற்று வருகின்றன.
புரொமோ
துளசி ஆனந்தியை பழிவாங்க நாற்காலியை உடைத்து எதுவும் தெரியாதவர் போல் வெளியே சென்றுவிட்டார்.
துளசி சொன்னது போல் சமையல் பொருட்களை நாற்காலியில் ஏறி அடுக்க ஆனந்தி ஏறியபோது நாற்காலி உடைந்து கீழே விழுகிறார். தலையில் ரத்தம் வழிய மயங்கிய ஆனந்தியை பார்த்து ஷாக்கான அன்பு அம்மா அவரை மருத்துவமனை சேர்க்கிறார்.
ஆனந்திக்கு இப்படி ஆனது தெரிந்து பதறியடித்து ஓடிவந்த அன்புவிற்கு மருத்துவர் ஒரு ஷாக்கிங் தகவல் கூறுகிறார். அதாவது ஆனந்தி குழந்தைக்கு ஹாட் பீட் இல்லையாம், ஆனந்தியை மட்டுமே காப்பாற்ற முடியுமே தவிர குழந்தை என கூற அன்பு ஷாக் ஆகி கதறி அழுகிறார். இதோ அந்த புரொமோ,
Source: Entertainment News