

நடிகை ஐஸ்வர்யா
பிரபல நடிகை லட்சுமியின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் இவர் நடித்திருந்தாலும் அவரது அம்மா அளவிற்கு சினிமாவில் பெயர் வாங்கவில்லை. ஆனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
ஆரம்பத்தில் ரஜினி, சிவகுமார் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் பின் தாய், அண்ணி ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகை பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில், பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த நேரத்தில் என்னுடைய தேவைக்காக சோப்பு விற்பனை செய்தேன், அதற்கு பலவிதமான விமர்சனங்கள் வந்தன.
கேக் விற்பனை செய்யலாம், மளிகை கடை வைக்கலாம், இட்லி கடை கூட வைக்கலாம், இதில் என்ன தவறு இருக்கிறது.
வேற எதையாவது விற்பனை செய்வதற்கு பதிலாக சோப்பை விற்பனை செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை. மரியாதையாக எந்த தொழிலை செய்தாலும் அது மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
Source: Entertainment News