விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின், நீதிமன்றத்தில் இருந்து வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.



நடிகர் விஜய் இப்படிப்பட்ட ஒருவர் தான்.. பிரபல நடிகை கௌசல்யா ஓபன் டாக் - Related Image

ஆனால், தேர்தல் நெருங்கிவிட்டதால் படம் வெளிவர வாய்ப்பில்லை என தெரிந்துவிட்டது. இதனால் தேர்தலுக்கு பின்தான் ஜனநாயகன் வெளிவரவுள்ளது. மே மாதம் வெளிவரும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கௌசல்யா ஓபன் டாக்



நடிகர் விஜய் இப்படிப்பட்ட ஒருவர் தான்.. பிரபல நடிகை கௌசல்யா ஓபன் டாக் - Related Image

நடிகர் விஜய்யிடம் பணிபுரிந்தவர்கள் அவரை குறித்து பேட்டிகளில் அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொள்வார்கள். அப்படி,விஜய்யுடன் இணைந்து ப்ரியமுடன், நேருக்கு நேர் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை கௌசல்யா பேட்டி ஒன்றில் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில், "யாருக்கும் தீங்கு நினைக்காத ஒரு நபர்தான் தளபதி விஜய். படப்பிடிப்பில் இயக்குநர் என்ன கூறினாலும் எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் அதை கேட்டு நடிப்பார். அப்போது அவர் நடிகர், இன்று அரசியலுக்கு சென்றுவிட்டார், இன்றும் அவரின் குணம் எதுவும் மாறவில்லை. அவரின் ரசிகர்கள் பலத்தை பார்க்கும்போது பிரமிக்க வைக்கிறது" என கூறியுள்ளார்.