


எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.

கதையில் குணமான ஈஸ்வரி வீட்டிற்கு வந்ததும் குணசேகரனை ஒரு வழி செய்வார் என்று பார்த்தால் எல்லாவற்றையும் மறந்து பழையபடி கணவனுக்கு அடங்கியபடி வாழ்கிறார்.
குணசேகரன் ஈஸ்வரியிடம் தான் நல்லவன், இனி உன் இஷ்டத்துக்கு இந்த வீட்டில் எல்லாம் நடக்கட்டும் என கூறியிருக்கிறார். ஈஸ்வரி கொஞ்சம் கொஞ்சமாக குணசேகரன் சொல்வதை கேட்டு பழையபடி மாற அதைப்பார்த்து ஜனனி, ரேணுகா, நந்தினி அனைவரும் வருத்தப்படுகிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஏற்கெனவே ஈஸ்வரி அனைத்தையும் மறந்து இருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத ஜனனிக்கு இப்போது ஒரு புதிய என்ட்ரியால் இன்னும் பிபி ஏறியுள்ளது.
அதாவது அப்பத்தா திடீரென என்ட்ரி கொடுத்துள்ளார், அவர் ஈஸ்வரியை நலம் விசாரிக்கிறார். பின் எப்படி எல்லா விஷயங்களையும் மறந்து அமைதியாக இருக்கிறாய், வீடே அமைதியாக இருக்கிறது என்கிறார். அதைக்கேட்ட ஈஸ்வரி நீங்கள் என்ன கூறுகிறீர்கள், எனக்கு ஒன்றும் புரியவில்லை என்கிறார்.
அப்பத்தா பேசுவதை பார்த்த நந்தினி, ரேணுகா அவர் அக்கா மறந்த விஷயம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என ஜனனியிடம் கூறி பதறுகிறார்.
Source: Entertainment News