தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் சுந்தர்.சி.

முறை மாமன், அருணாச்சலம், அரண்மனை, கலகலப்பு. அன்பே சிவம், உள்ளம் கொள்ளை போகுதே என ஏகப்பட்ட படங்களை இயக்கிய சுந்தர்.சி இடையில் நாயகனாகவும் களமிறங்கி நிறைய படங்கள் நடித்தார்.



ரஜினி படத்தை இயக்குவதில் அந்த பிரச்சனை இருந்தது, அதான் விலகினேன்... ஓபனாக கூறிய சுந்தர் சி - Related Image

இப்போது நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கு இடையில் சுந்தர்.சிக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு நீண்ட இடைவேளைக்குப் பிறகு கிடைத்தது, ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் சில காரணங்களால் படத்தில் இருந்து வெளியேறினார்.

காரணம் என்ன

அண்மையில் ஒரு பேட்டியில் ரஜினி படத்தில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், உண்மையில் சொல்லப்போனால் ரஜினி சார் படத்தில் எனக்கு அதிக Pressure இருந்தது.

இதுவரை என்னுடைய விருப்பம் போல் தான் படங்கள் இயக்கினேன், மக்களுக்கு பிடிக்கும் என தோன்றினால் அதை செய்துவிடுவேன். ஆனால் இவ்வளவு பெரிய படம் செய்யும் போது என் இஷ்டத்திற்கு முடிவு எடுக்க முடியாது.

அந்த படத்தில் அதீத அழுத்தம் இருந்தது. அந்த ப்ராஜெக்ட்டுக்கு உண்மையாக இருக்க முடியவில்லை, அதனால்தான் விலகினேன். ரஜினி சாரிடம் சொல்லிவிட்டு தான் படத்திலிருந்து நான் விலகப்போவதாக அறிவித்தேன் என்றார்.