நடிகை மௌனி ராய் நாகினி சீரியல் மூலமாக பிரபலமானவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

கடந்த 2022ல் அவர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். துபாயை சேர்ந்த தொழிலதிபரான அவரை தற்போது மௌனி ராய் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மௌனி ராய் அவரை அன்ஃபாலோ செய்துவிட்டார்.



விவாகரத்து செய்தி உண்மையா? நாகினி மௌனி ராய் கொடுத்த பதில் - Related Image

அதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

மேலும் மௌனி ராயின் நெருங்கிய தோழியான நடிகை திஷா பாட்னி சூரஜ் நம்பியாரை அன்ஃபாலோ செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

விளக்கம்

இந்நிலையில் நடிகை மௌனி ராய் தனது விவாகரத்து பற்றிய செய்திக்கு விளக்கம் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

"தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு தயவு செய்து பிரைவசி கொடுங்கள்" என கூறி இருக்கிறார்.

Space and Privacy கொடுங்கள் என அவர் கூறி இருப்பதால், விவாகரத்து உண்மை தானோ? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.