

சோழன் - நிலா
விவாகரத்து

அய்யனார் துணை குடும்பத்தில் நிலா வந்த பிறகுதான் எல்லா நல்ல விஷயங்களும் நடந்தது என்பதால் அவர் விவாகரத்து பெற்று இந்த வீட்டை விட்டு போக கூடாது, சோழனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாக இருக்கிறது.
நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வேண்டாம் என சொல்லத்தான் நிலா முடிவு செய்திருந்தார். ஆனால், சோழன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என்கிற உண்மை நீதிமன்றத்தில் இருந்த கான்ஸ்டபிள் மூலம் தெரியவர, தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிபதியிடம் நிலா கூறினார். இதனால், சோழன் -நிலாஜோடிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.
வெளியேறும் நிலா
விவாகரத்து பெற்று வீட்டிற்கு வரும் நிலா, சோழன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட விஷயத்தை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் கூறுகிறார்.
மேலும், இனி இந்த வீட்டில் தன்னால் இருக்க முடியாது என கூறி, அய்யனார் துணை வீட்டில் இருந்து நிலா வெளியேறுகிறார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை அவர்களுக்கு கொடுத்துள்ளது.
Source: Entertainment News