

நடிகர் சூர்யாவின் கருப்பு படம் இன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படம் வெளியாகவில்லை. முதலில் 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதன் பின் அடுத்தடுத்த காட்சிகளும் ரத்து ஆனது. மாலையில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
மறுபுறம் வடஇந்தியாவில் பல இடங்களில் கருப்பு படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டு இருக்கிறது. தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் கியுப் நிறுவனம் கேடிஎம் வழங்கியதால் இது நடந்து இருக்கிறது.

தியேட்டர்களில் எடுக்கப்பட்ட பல காட்சிகளும் இணையத்தில் கசிந்திருகிறது.
சட்ட நடவடிக்கை
கருப்பு படத்தை சட்டவிரோதமாக லீக் செய்தவர்கள், பதிவிறக்கம் செய்து ஷேர் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
Source: Entertainment News