
நடிகர் விஜய் தற்போது முதலமைச்சர் விஜய்யாக கடந்த சில தினங்களாக பணியாற்ற தொடங்கி இருக்கிறார். சட்டமன்றத்தில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்து இருக்கிறது விஜயயின் தவெக அரசு.
விஜய்யின் வீடு தற்போது நீலாங்கரையில் இருக்கிறது. அதனால் தினமும் சட்டப்பேரவைக்கு வர முதலமைச்சர் கான்வாய் உடன் 20 கிலோமீட்டருக்கும் மேல் வர வேண்டி இருக்கிறது. போக்குவரத்து நிறுத்தப்படுவதால், பொதுமக்களுக்கும் அதிகம் பாதிப்பு ஏற்படுவதாக தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
போயஸ் கார்டனில் குடியேறுகிறாரா?
இந்நிலையில் விஜய் சென்னையின் போயஸ் கார்டன் பகுதியில் குடியேற இருப்பதாக ஒரு செய்தி அரசியல் வட்டாரத்தில் பரவி இருக்கிறது.
ஜெயலலிதா காலத்தில் மிகமுக்கிய அதிகார மையமாக போயஸ் கார்டன் இருந்த நிலையில், தற்போது விஜய்யும் அதே ஏரியாவில் குடியேறுகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Source: Entertainment News