
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக முடியாமல் சென்சார் தொடர்பான பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. தேர்தலுக்கு முன் அந்த படம் திரைக்கு வருமா இல்லையா என்பதே அவரது ரசிகர்கள் எல்லோரது மனதிலும் இருக்கும் கேள்வி.
தயாரிப்பாளரை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது என விஜய் இந்த சர்ச்சை பற்றி பேட்டியில் பேசி இருந்தார்.
புலி வழக்கில் தீர்ப்பு
விஜய் வீட்டில் 2015ல் நடத்திய வருமான வரித்துறை ரெய்டில், அவர் புலி படத்திற்காக வாங்கிய 15 கோடி ருபாய் சம்பளத்தை மறைத்ததாக கண்டறியப்பட்டு, 1.5 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
தனக்கு அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அவர்தம் விதித்தது சரிதான் என சொல்லி விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தது.
Source: Entertainment News