


ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகைஆல்யா மானசா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக களமிறங்கியவர் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார். அதன்பின் திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆகி இருந்தவர் கொஞ்சம் இடைவேளை எடுத்து சன் டிவி பக்கம் சென்றவர் இனியா என்ற சீரியலில் நடித்து வந்தார்.
அந்த தொடரும் முடிவடைய ஆல்யா மானசா கொஞ்சம் கேப் எடுத்தார்.
அதன்பின் ஜீ தமிழ் பக்கம் வந்தவர் பாரிஜாதம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
வீடியோ
சீரியல், தனியார் நிகழ்ச்சிகள், போட்டோ ஷுட், குடும்பத்துடன் சுற்றுலா என செம பிஸியாக இருக்கும் ஆல்யா மானசா அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், காலில் அடிபட்டதால் நடக்க முடியாமல் நடந்து வருகிறார். அவரை அவரது மகன் மற்றும் மகள் கையை பிடித்து பத்திரமாக அழைத்து வருகிறார்கள்.
தனது குழந்தைகள் தன்னை பத்திரமாக அழைத்து வரும் வீடியோவை வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
View this post on InstagramA post shared by alya_manasa (@alya_manasa)
View this post on InstagramA post shared by alya_manasa (@alya_manasa)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by alya_manasa (@alya_manasa)
Source: Entertainment News