


எதிர்நீச்சல்
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் தற்போதைய கதைக்களம்படி ஜனனி கர்ப்பமாகியுள்ளார். ஆனால், அவர் உடல்நிலை பலவீனமாக உள்ளது என மருத்துவர் கூறியுள்ளார்.

இதனால், ஜனனியை கூடுதலாக கவனித்துக்கொள்ள வேண்டும் என சக்தி முடிவு செய்துள்ளார். இந்த சமயத்தில் ஜனனியுடன் சேர்ந்து பிசினஸ் பண்ணவேண்டும் என இருவர் வந்தனர். ஆனால், இதெல்லாம் இப்போது வேண்டாம் என சக்தி கூறிவிட்டார்.
அதிருப்தியில் ஜனனி
ஜனனி தற்போதுகர்ப்பமாக இருக்கிறார், அவரையும், கருவில் உள்ள குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு தந்தையாக அவர் எடுத்த முடிவு சரியாக இருந்தாலும், இது ஜனனிக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. ஜனனிக்கு அவர்களுடன் இணைந்து பிசினஸ் செய்யவேண்டும் என்று இருந்தாலும் சக்தியின் முடிவை அவரால் மீற முடியவில்லை.
இந்த நிலையில், ஜனனியின் தந்தை வீட்டிற்கு வந்து நீ ஒரு பாதையை தேர்வு பண்ணிருக்க, அது உனக்கு பிடித்திருந்தால், அதை நீ செய்
என கூறியுள்ளார். தற்போது ஜனனி தனது கணவர் வார்த்தையை மதிப்பாரா அல்லது தந்தை கூறியது போல் பிசினஸ் செய்யப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Entertainment News